தாமரைப் பூத்த தடாகங்கள்!
தமிழிசை மேதை தண்டபாணி தேசிகர் பாடிய 'தாமரைப் பூத்த தடாகமடி' என்கிற பாட்டு காலத்தால் அழியாதது. 'மலர்களிலே அவள் மல்லிகை' என்று மல்லிகைப் பூவைத் தூக்கி நிறுத்திப் பாடிய கண்ணதாசன், ஒரு மன்மதக் கவிஞன். ஆனால், தாமரையைத் தூக்கி நிறுத்தித் துதி பாடியவன் பாரதி. ஏனெனில், பாரதி ஒரு தெய்வீகக் கவிஞன்.








