மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை: வாய்ப்பை நழுவவிடாதீர்கள்..!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிதாக 450 பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2023, 6:06 am

தினமணி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிதாக 450 பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ந.க.எண். 2/10557/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: ரூ.8,754 மற்றும் தினசரி போக்குவரத்துப்படியாக ரூ.120 வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி., பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவுபவர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: மாதம் ரூ.8,717 மற்றும் தினசரி போக்குவரத்துப்படி ரூ.100 வழங்கப்படும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: காவலர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: 8717 மற்றும் தினசரி போக்குவரத்துப்படி ரூ.100 வழங்கப்படும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Story image

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 1.7.2022 தேதியின்படி பொதுப்பிரிவினர் 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 10, குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், மதுரை - 20

நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி: தகுதியானவர்களுக்கு 18.1.2023 முதல் 24.1.2023 வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். இதுகுறித்த தகவல் தகுதியானவர்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

மேலும் விவரங்கள் அறிய www.tncsc.tn.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.