தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிதாக 450 பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ந.க.எண். 2/10557/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: ரூ.8,754 மற்றும் தினசரி போக்குவரத்துப்படியாக ரூ.120 வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி., பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: உதவுபவர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: மாதம் ரூ.8,717 மற்றும் தினசரி போக்குவரத்துப்படி ரூ.100 வழங்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர்
காலியிடங்கள்: 150
சம்பளம்: 8717 மற்றும் தினசரி போக்குவரத்துப்படி ரூ.100 வழங்கப்படும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 1.7.2022 தேதியின்படி பொதுப்பிரிவினர் 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 10, குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், மதுரை - 20
நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி: தகுதியானவர்களுக்கு 18.1.2023 முதல் 24.1.2023 வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். இதுகுறித்த தகவல் தகுதியானவர்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.tncsc.tn.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ராணுவத்தில் அதிகாரி வேலை வேண்டுமா? யுபிஎஸ்சி அறிவிப்பு!
ரூ.92,300 சம்பளத்தில் உதவி சார்பு ஆய்வாளர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
ரூ.1,30,800 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? டிஆர்டிஓ-இல் வேலை