புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரத்த அழுத்தம் உட்படப் பல சிக்கலான நோய்களைத் தீர்க்கும் உருளைச் சாறு!

நீரிழிவு, இரைப்பைப் பிரச்சனை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தீரவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம்...

News image
Updated On :1 ஜூலை 2017, 12:08 pm

தினமணி


நீரிழிவு, இரைப்பைப் பிரச்சனை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தீரவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம் உங்கள் சமையலறையில் பொதுவாக இருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுலபமாக இதற்குத் தீர்வு காணலாம்.

உருளைக்கிழங்கின் சாறு வெறு எந்தச் சிகிச்சையை விடவும் அதிகமான நன்மையைப் பயக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரிழிவு நோய், புற்றுநோய், கஸ்டரிடிஸ் எனப்படும் இரைப்பையில் ஏற்படக்கூடிய புண், ரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கலான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆகச்சிறந்த தீர்வாக அமையும் உருளைக்கிழங்கு சாறு.

காலை உணவு, சிற்றுண்டி மற்றும் இரவு உணவு போன்றவற்றை உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி உருளைச் சாற்றை குடிநீருடன் சேர்த்து பருகிவந்தால் போதும். சிக்கலான நோய்கள் மட்டுமின்றி தொப்பையையும் இது கரைத்துவிடும். 

உருளைக்கிழங்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் அதிகமான பயன்களைக் கொண்ட உணவு, இரைப்பை அழற்சியைச் சரி செய்யும் சிறந்த மருந்தாக விஞ்ஞானிகள் கருதுவது இந்த உருளைக்கிழங்கு சாறைதான். இதில் உள்ள அமிலம் உடலில் உள்ள குலுக்கோஸ் அளவைக் குறைத்து நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்தாக அமையும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

Story image

பௌத்த துறவியான டோமிசாவா என்பவர் “எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும் கவலைப்பட ஒன்றுமே இல்லை உருளைக்கிழங்கு சாற்றை ஒரு தேக்கரண்டி தினசரி உண்டு வந்தால், புற்றுநோய் முற்றிலும் குணமாகும்” என்று கூறியுள்ளார். 

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வேகவைத்த உருளைக்கிழங்கின் கலவை எலிகளின் டியூமரை கட்டுப்படுத்தியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி ஏற்படும் தலைவலியை இது சரி செய்யக்கூடியது. பதப்படுத்தப்படாத உருளைக்கிழங்கின் சாறு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக் கூடியது.

உருளைக்கிழங்கு சாற்றின் நன்மைகள்:

உருளைக்கிழங்கு சாறு தயாரிக்கும் முறை:

  • முதலில் உருளைக்கிழங்கைக் கழுவி அதன் மேற்தோலை உரித்தெடுக்க வேண்டும்.
  • மெல்லிய துண்டுகளாக நறுக்கி, சாறு இயந்திரத்தில் போட வேண்டும்.
  • தேவைப்பட்டால் இந்தச் சாற்றுடன் ஆப்பிள் மற்றும் பீன்ஸ் சாற்றைக் கலந்து குடிப்பது சுவையை அதிகரிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.