மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரத்த அழுத்தம் உட்படப் பல சிக்கலான நோய்களைத் தீர்க்கும் உருளைச் சாறு!

நீரிழிவு, இரைப்பைப் பிரச்சனை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தீரவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம்...

News image
Updated On :1 ஜூலை 2017, 5:38 pm IST


நீரிழிவு, இரைப்பைப் பிரச்சனை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தீரவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம் உங்கள் சமையலறையில் பொதுவாக இருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுலபமாக இதற்குத் தீர்வு காணலாம்.

உருளைக்கிழங்கின் சாறு வெறு எந்தச் சிகிச்சையை விடவும் அதிகமான நன்மையைப் பயக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரிழிவு நோய், புற்றுநோய், கஸ்டரிடிஸ் எனப்படும் இரைப்பையில் ஏற்படக்கூடிய புண், ரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கலான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆகச்சிறந்த தீர்வாக அமையும் உருளைக்கிழங்கு சாறு.

காலை உணவு, சிற்றுண்டி மற்றும் இரவு உணவு போன்றவற்றை உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி உருளைச் சாற்றை குடிநீருடன் சேர்த்து பருகிவந்தால் போதும். சிக்கலான நோய்கள் மட்டுமின்றி தொப்பையையும் இது கரைத்துவிடும். 

உருளைக்கிழங்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் அதிகமான பயன்களைக் கொண்ட உணவு, இரைப்பை அழற்சியைச் சரி செய்யும் சிறந்த மருந்தாக விஞ்ஞானிகள் கருதுவது இந்த உருளைக்கிழங்கு சாறைதான். இதில் உள்ள அமிலம் உடலில் உள்ள குலுக்கோஸ் அளவைக் குறைத்து நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்தாக அமையும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

Story image

பௌத்த துறவியான டோமிசாவா என்பவர் “எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும் கவலைப்பட ஒன்றுமே இல்லை உருளைக்கிழங்கு சாற்றை ஒரு தேக்கரண்டி தினசரி உண்டு வந்தால், புற்றுநோய் முற்றிலும் குணமாகும்” என்று கூறியுள்ளார். 

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வேகவைத்த உருளைக்கிழங்கின் கலவை எலிகளின் டியூமரை கட்டுப்படுத்தியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி ஏற்படும் தலைவலியை இது சரி செய்யக்கூடியது. பதப்படுத்தப்படாத உருளைக்கிழங்கின் சாறு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக் கூடியது.

உருளைக்கிழங்கு சாற்றின் நன்மைகள்:

  1. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  2. உடலில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றக் கூடியது.
  3. தோல் நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையாக அமையும்.
  4. இரைப்பை அழற்சி மற்றும் பிற அடிவயிறு பிரச்னைகளை தீர்க்கக் கூடியது.
  5. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்பு கோளாறுகளை சரி செய்ய வல்லது.  
  6. இதய நோயிலிருந்து இதயத்தை பாதுகாக்கக் கூடியது.
  7. சூடான உருளைக்கிழங்கு பல ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்களின் அசல் ஆதாரமாக இருக்கிறது. 

உருளைக்கிழங்கு சாறு தயாரிக்கும் முறை:

  • முதலில் உருளைக்கிழங்கைக் கழுவி அதன் மேற்தோலை உரித்தெடுக்க வேண்டும்.
  • மெல்லிய துண்டுகளாக நறுக்கி, சாறு இயந்திரத்தில் போட வேண்டும்.
  • தேவைப்பட்டால் இந்தச் சாற்றுடன் ஆப்பிள் மற்றும் பீன்ஸ் சாற்றைக் கலந்து குடிப்பது சுவையை அதிகரிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.