ரத்த சோகையா? இந்த சூப் குடிங்க!

முதலில் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி இரண்டையும் நறுக்கி கொள்ளவும்.
ரத்த சோகையா? இந்த சூப் குடிங்க!
Published on
Updated on
1 min read

 
கரிசலாங்கண்ணிக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கட்டு 
தக்காளி - 2 
வெங்காயம் - 1
மிளகு, சீரகம் -  தலா அரை டீஸ்பூன் 
பூண்டு - 6 பல் 
தனியா - 10 கிராம் 
புதினா இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன் 
பெருங்காயம் -  கால் ஸ்பூன் 
எலுமிச்சை -  1
எண்ணெய் -  2 ஸ்பூன் 

செய்முறை : முதலில் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி இரண்டையும் நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், பூண்டு, தனியா, புதினா, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைத் தட்டிப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய கீரையையும் சேர்த்து வதக்கி அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து நன்கு பிரட்டவும் .பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

பலன்கள் : இந்த சூப்பை வாரத்திற்கு நான்கு நாட்கள் வீதம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல்லீரல் பலமடையும். ரத்த சோகை மறையும். ரத்தத்தில் உப்பின் அளவை குறைக்கவும் , உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த உதவும் கீரைக் கூட்டு
 
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com