கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

நிர்பயா குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையத்தில் தாய் கோரிக்கை

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து தில்லியில் உள்ள மகளிர் ஆணையத்தில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2018, 12:03 pm

PTI


புது தில்லி: நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து தில்லியில் உள்ள மகளிர் ஆணையத்தில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, தில்லி மகளிர் ஆணையம், திகார் சிறைச்சாலை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், மருத்துவத் துணைப்படிப்பு படித்து வந்த மருத்துவ மாணவி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து குறிப்பிட்டுள்ளது. தாமதம் செய்யப்படுவது குறித்து விளக்கம் அளிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படியும், உயிரிழந்த தங்கள் மகளின் மரணத்துக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டால்தான் நியாயம் கிடைக்கும் என்றும் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தூக்குத் தண்டனை குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராமெடிக்கல் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.