எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கேலி, கிண்டலின் உச்சமாக பள்ளி மாணவியின் தலையில் மோட்டார் பைக்கை ஏற்றிக் கொன்ற  கயவர்கள் 

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை பின் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தவர்கள், உச்ச கட்டமாக  அவளது தலையில் மோட்டார் பைக்கை ஏற்றிக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:21 pm IST

சுல்தான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை பின் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தவர்கள், உச்ச கட்டமாக  அவளது தலையில் மோட்டார் பைக்கை ஏற்றிக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுப் பள்ளி மாணவி ஒருவருக்குத்தான் இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்த 8-ஆம் தேதியன்று அவர் பள்ளி முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது கயவர்கள் லர் அவரை வழிமறித்துக் கிண்டல் கேலி செய்துள்ளனர். அம்மாணவி எழுப்பிய குரல் கேட்டு அங்கு அருகில் உள்ள பொது மக்கள் திரளவே, அவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.  

ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் அந்தப் பெண்ணைத் தேடி வந்துள்ளார்கள். மீண்டும் அவரை கேலியும் கிண்டலும் செய்து ஆபாச வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர்.. அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் சப்தம் எழுப்ப முயற்சிக்க, அவர்கள் அந்தப் பெண்ணை தரையோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொன்டு, அவள் தலையில் மோட்டார் பைக்கை ஏற்றி இறக்கியுள்ளனர். இதில் அப்பெண்ணின் மண்டையோடு கடுமையாக சேதமடைந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட பெண்ணின் தாத்தா அருகில் உள்ள லம்ப்ஹுவா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அங்கு எப்.ஐ.ஆர் எதுவும் பதியப்படவில்லை. இதனால் முறையான போலீஸ் புகார் இல்லாத காரணத்தால் லக்னௌவில் உள்ள கே.ஜி.எம்.யு மருத்துவமனையிலும் அவளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர். இறுதியில் போராட்டத்திற்குப் பிறகு சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் கடந்த 14-ஆம் தேதியன்று மரணமடைந்து விட்டார்.

தற்போது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்டமாக லம்ப்ஹுவா காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சய் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.