தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6,725 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதிதாக 6,725 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,03,096 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,610 பேர் குணமடைந்துள்ளனர், 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 6,652 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,60,069 பேர் குணமடைந்துள்ளனர். 36,675 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.