ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 11,451  பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

Updated On :8 நவம்பர் 2021, 5:21 am


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 11,451  பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.43 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், சுமார் 262 நாள்களுக்குப் பிறகு நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 1.42 லட்சமாகக் குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்த 266 பேர் மரணமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 4,61,057 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 31 நாள்களாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது. 

நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 108.47 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.