புது தில்லி: நாட்டில் 80 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொணடிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 175 கோடியை எட்டியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரையில், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் 80 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு விரைவில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்ற இலக்கை நோக்கி விரைகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.