புது தில்லி: நாட்டில் 88 சதவீத மக்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொணடிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 193 (1,93,13,41,918) கோடியை எட்டியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரையில்,
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் 88 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
வாழ்த்துகள் இந்தியா! தடுப்பூசி போட்ட பிறகும், கரோனா நோயை சரியான முறையில் பின்பற்றுங்கள்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
நாடு விரைவில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்ற இலக்கை நோக்கி விரைகிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜேபிவிஎல் 4வது காலாண்டு இழப்பு ரூ. 13.37 கோடி!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! மீண்டும் என்டிஏ ஆட்சி!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! | உதயநிதி ஸ்டாலின் | DMK

8 தொகுதிகளில் விசிகவுக்கு 2 வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


