

விஜயவாடாவில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக பற்றிய தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.