ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆந்திரத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து: 2 பேர் பலி

விஜயவாடாவில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள். 

News image

கோப்புப் படம்.

Updated On :23 அக்டோபர் 2022, 5:53 am

DIN

விஜயவாடாவில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள். 

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக பற்றிய தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.