கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இண்டிகோ விமான தீ விபத்து: விசாரணைக்கு உத்தரவு

இண்டிகோ விமான என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :29 அக்டோபர் 2022, 4:56 am

DIN

இண்டிகோ விமான என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. 

தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இண்டிகோ 6இ-2131 விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது என்ஜினில் தீப்பொறி கிளம்பியுள்ளது.

இதனைக் கண்ட விமானி, தில்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான என்ஜினில் வேகமாக தீ பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட விடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. 

இந்நிலையில், இண்டிகோ விமான என்ஜினில் தீ விபத்து குறித்து  விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. 

தற்போது விமானம் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.