புதிய நாடாளுமன்ற கட்டடம்: மக்களிடம் பிரதமர் மோடி புதிய வேண்டுகோள்!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
புதிய நாடாளுமன்ற கட்டடம்: மக்களிடம் பிரதமர் மோடி புதிய வேண்டுகோள்!
Updated on
1 min read

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்த அவர், மக்கள் அனைவரும் எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினை தங்கள் குரல் பதிவோடு பகிருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்யும். இந்த விடியோ புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பான அமைப்பை காட்டும் விதமாக பகிரப்பட்டுள்ளது. நான் உங்களிடத்தில் ஒரு சிறப்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன். இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினை உங்களது சொந்த குரலில் உங்கள் எண்ணங்களை, கருத்துகளை பதிவு செய்து பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நீங்கள் பகிரும் விடியோக்களில் சிலவற்றை நான் ரீ-ட்விட் செய்வேன். எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்த மறந்துவிட வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளார்.

நாளை மறுநாள் (மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com