ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரேக் பழுதாகி நடைமேடையில் ஏறிய பேருந்து: 3 பேர் பலி

ஆந்திரத்தில் பிரேக் பழுதாகி நடைமேடையின் மீது பேருந்து மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 நவம்பர் 2023, 7:41 am

DIN

ஆந்திரத்தில் பிரேக் பழுதாகி நடைமேடையின் மீது பேருந்து மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்திற்கு இன்று காலை  8.20 மணிக்கு பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று நடைமேடையின் மீது ஏறியது. 

பேருந்தின் பிரேக் பழுதானதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நடைமேடையின் மீது ஏறியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த அரசுப்  பேருந்து ஓட்டுநர், ஒரு பெண், ஒரு சிறுவன் என 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு குழந்தை உள்பட சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.