காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று(ஆக. 19) மனு தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், எம்.பி.க்கள் என தெலங்கானா காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உடன் சென்றிருந்தனர்.
கட்சியின் மாநில பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷியும் கலந்து கொண்டார்.
அபிஷேக் சிங்வி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இரு முறையும், (2006-18) மேற்குவங்கத்தில் இருந்து ஒரு முறையும்(2018-24) மாநிலங்களவை உறுப்பினர் ஆகியுள்ளார்.
தற்போது 4 ஆவது முறையாக அவர் மாநிலங்களவை எம்.பி. யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி

மூன்றாவது, நான்காவது கட்சியும் நோட்டாவும் ஒன்று: காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம்
தொண்டாமுத்தூர்! இறுதிச்சடங்கு பானையுடன் மனு தாக்கல் செய்த சுயேச்சை!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


