சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசமானது ஜம்மு-காஷ்மீர்!

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் ஆகியுள்ளது.

News image

ராஜீவ் ராய் பட்நாகர் (கோப்புப்படம்)

Updated On :7 பிப்ரவரி 2024, 8:55 pm IST

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியுள்ளது.

கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தினை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசமானது ஜம்மு-காஷ்மீர்.

இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 30 பேருக்கு ‘தர்ஸி கலை’ பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியை ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜீவ் ராய் பட்நாகர் மற்றும் மத்திய திறன் மேம்பாடுத் துறை செயலர் அதுல் குமார் திவாரி ஆகியோர் புதன்கிழமை நடத்தினர். 

“கைவினைக் கலைஞர்கள் சமூகத்தை சுயதொழில் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பெற்றுள்ளது” என்று பட்நாகர் தெரிவித்தார்.

திறன் மேம்பாட்டின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் நிர்வாகத்தின் வேகத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மிக விரைவில் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டமானது கைவினைக் கலைஞர்களுக்கு உதவுவதற்காக 2023 செப்டம்பரில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இத்திட்டமானது ஐந்து முதல் ஏழு நாட்களுக்கான அடிப்படை பயிற்சி, 15 நாட்களுக்கு மேலான பயிற்சி உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.