பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

கேஜரிவால் கைது: நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப இந்தியா கூட்டணிக்கு வேண்டுகோள்

விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை குறிவைக்கிறது பாஜக என்றார் சஞ்சய் சிங்.

News image

சஞ்சய் சிங்

Updated On :26 ஜூன் 2024, 9:57 pm IST

அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.

விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து தாக்கிவருவது குறித்து அவையில் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அவரின் இல்லத்தில் சோதனை நடத்தி அமலாக்கத் துறையினர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து திகார் சிறையில அடைத்தனர்.

சிறையில் உள்ள கேஜரிவால் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும் அமலாக்கத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கேஜரிவால் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், திகார் சிறையில் உள்ள கேஜரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது.

தில்லி கூட்டணி கட்சித் தலைவர்களிடம் இது குறித்து பேசவுள்ளேன். நாடாளுமன்றத்தில் கேஜரிவால் கைது குறித்து பேச அவர்களிடன் வேண்டுகோள் வைக்கவுள்ளேன். மற்ற எதிர்க்கட்சி தலைவர்களிடமும் இது குறித்து பேசவுள்ளோம். உத்தவ் தாக்கரேவிடம் பேசினோம். காங்கிரஸ் தலைவர்களிடமும் பேசி வருகிறோம்.

மாநில அளவில் வேறுபட்டிருந்தாலும், அரசியலமைப்பு, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேசிய அளவில் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கேஜரிவால் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து அவையில் குரல் எழுப்பினர்.

விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து தாக்கிவருகிறது பாஜக அரசு'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.