சிக்கிம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சிக்கிம் மாநிலத்தின் நம்சி, சோரெங் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்றது.
இந்த நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் பவன் சாம்லிங் தலைமையிலான எதிர்க்கட்சி சிக்கிம் ஜனநாயக முன்னணிக் கட்சி அறிவித்தது.
இதனையடுத்து, ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், சோரெங் தொகுதியில் ஆதித்யா கோலேவும், நம்சி தொகுதியில் சதீஷ் சந்திரராயும் வெற்றி பெற்றுள்ளனர்.
முதல்வர் பிரேம் சிங் தமங் மகன்தான், சோரெங் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: என்ன நடக்கிறது ஜார்க்கண்டில்.. மாறி மாறி முந்தும் கூட்டணிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

மூன்றாம் கட்ட எஸ்ஐஆா்: 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவ நடைமுறை தொடக்கம்

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?
சிக்கிமில் ரூ. 4,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



