தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிக்கிம் இடைத்தேர்தல் வெற்றி அறிவிப்பு!!

போட்டியாளரின்றி ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

News image

சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா

கோப்புப் படம்

Updated On :23 நவம்பர் 2024, 7:04 am

DIN

சிக்கிம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிக்கிம் மாநிலத்தின் நம்சி, சோரெங் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்றது.

இந்த நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் பவன் சாம்லிங் தலைமையிலான எதிர்க்கட்சி சிக்கிம் ஜனநாயக முன்னணிக் கட்சி அறிவித்தது.

இதனையடுத்து, ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், சோரெங் தொகுதியில் ஆதித்யா கோலேவும், நம்சி தொகுதியில் சதீஷ் சந்திரராயும் வெற்றி பெற்றுள்ளனர்.

முதல்வர் பிரேம் சிங் தமங் மகன்தான், சோரெங் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.