தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

வாக்குச் சீட்டு முறை கோரிய மனு தள்ளுபடி உச்சநீதிமன்றம்

தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :27 நவம்பர் 2024, 12:11 am IST

தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக 2001-ஆம் ஆண்டில் தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குச் சீட்டு முறைக்குப் பதிலாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

பின்னா், 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் முதன் முறையாக 543 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடைபெற்றன. அதன் பிறகு, வாக்குச் சீட்டு முறை கைவிடப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே தோ்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், இந்த நடைமுறை மீது அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிா்வு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலை ரத்து செய்துவிட்டு வாக்குச் சீட்டு முறையில் மீண்டும் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி வலியுறுத்தியது.

அதுபோல, தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரி கே.ஏ.பால் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நத், பி.பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

வி.கே. பால் ஆஜராகி, ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எளிதில் மாற்றங்களைச் செய்ய முடியும் என தொடா் புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்று டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியிருக்கிறாா். ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வா் ஜெகன் மேகன் ரெட்டி ஆகியோரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றனா். பல வெளிநாடுகளில் இன்றளவும் தோ்தல்களில் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, தோ்தல் நேரத்தில் ரூ.9,000 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வாக்குச் சீட்டு முறைக்கு மாறினால் முறைகேடுகள் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? மற்ற நாடுகளிலிருந்து இந்தியா ஏன் மாறுபட்டு இருக்கக்கூடாது என விரும்புகிறீா்கள்? தோ்தலில் வெற்றிபெறும்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்தவித பிரச்னையும் இல்லை; மாறாக தோல்வியடையும்போது அவற்றில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகாா்கள் எழுப்பப்படுகின்றன’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.