நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

மேலாதிக்கத்தை ஒருபோதும் இந்தியா திணிக்காது: உ.பி. முதல்வர்

விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்றும் பேச்சு

News image

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்) - PTI

Updated On :4 ஏப்ரல் 2025, 10:17 pm IST

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் தும்ரியாகஞ்ச்சில் குரு கோரக்ஷநாத் ஞானஸ்தலி கல்வி மையத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசியதாவது, ``தனது மனைவி சீதையைத் தேடி ராமர் இலங்கையை வென்றார். இலங்கை மன்னன் ராவணனைத் தோற்கடித்த பிறகு, ராஜ்ஜியத்தை விபீஷனிடம் ஒப்படைத்தார். இதேபோல், கிஷ்கிந்தாவில் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு முடிசூட்டினார். ராமர் மற்றும் கிருஷ்ணரை கட்டுக்கதைகள் என்று நிராகரித்து, இந்திய பாரம்பரியங்களை அவமதிப்பதற்காக சிலர் பார்த்தனர்.

தேசியவாதம், கலாசாரம், தாய்நாட்டின் மரபுகளுடன் கல்வி ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்தியா இனி பின்தொடர்பவர் அல்ல; அது தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். புதிய இந்தியா தனது வலிமையையும் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது.

வலிமை, நுண்ணறிவு, பிரம்மாண்டத்தின் அடிப்படையில் இந்தியா எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், அது ஒருபோதும் தனது மேலாதிக்கத்தை யார் மீதும் திணிக்காது; யாருடைய மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா அனைத்து துறைகளிலும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்தியாவின் பாரம்பரியம் எப்போதும் அறிவை மதிக்கிறது. அனைத்து திசைகளிலிருந்தும் அறிவின் ஓட்டத்தைத் தழுவுவது முன்னேற்றத்திற்கு அவசியம். இந்தியாவின் அறிவுசார் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, வேதங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.