சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சத்தீஸ்கரில் 14 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் 14 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

News image

கோப்புப்படம் - PTI

Updated On :21 ஜனவரி 2025, 11:20 am IST

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் - ஒடிஸா எல்லையில் காரியாபந்த் மாவட்டத்தில் காவல்துறையினர் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் சோதனை நடத்தினர். அப்போது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவலர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதில் மத்திய நக்சல்கள் குழு உறுப்பினரான ஜெயராம் உள்பட 14 -க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டதாக காரியாபந்த் காவல் கண்காணிப்பாளர் நிகில் ரஹேச்சா தெரிவித்துள்ளார்.

மேலும், கொல்லப்பட்ட நக்சல்கள் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரைஃபிள் போன்ற தானியங்கி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் சாவ் கூறியதாவது:

“அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் துணிச்சலுடன் செயல்பட்டு வருகின்றனர்.

காரியாபந்தில் நக்சல்களை கொன்ற வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நக்சல்வாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16 ஆம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தில் 12 நக்சல்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.