27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரிலுள்ள சீதையின் கோயில் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

பிகார் முதல்வர் நிதிஷ் குமார்

Updated On :1 ஜூலை 2025, 4:15 pm IST

பிகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள, சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், புனௌரா தாம் ஜானகி கோயில் உள்ளிட்ட புனித தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்த ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, இன்று (ஜூலை 1) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் நிதிஷ் குமார், புனௌரா தாம்மில் பிரம்மாண்ட கோயிலும், மற்ற கட்டமைப்புகளுக்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிகாரின் சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரூ.137 கோடி செலவில் பழைய புனௌரா தாம் ஜானகி கோயில் புதுப்பிக்கப்படும் எனவும், ரூ.728 கோடி செலவில் அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள தொகை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியை நிர்வாகிக்கப் பயன்படுத்தப்பட்டு, கோயிலை இணைக்கும் அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தப் புதிய கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள நிலையில், பிகாரில் இந்தாண்டு (2025) இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.