கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சு: டிரம்ப் திருப்தி!

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகப் பேச்சு குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதிபா் டொனால்ட் டிரம்ப், இது சிறப்பாக பலனளிக்கும் என்று குறிப்பிட்டாா்.

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- ஏபி
Updated On :29 மார்ச் 2025, 7:33 pm

Din

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகப் பேச்சு குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதிபா் டொனால்ட் டிரம்ப், இது சிறப்பாக பலனளிக்கும் என்று குறிப்பிட்டாா்.

மேலும், பிரதமா் மோடி மிகவும் புத்திசாலி; எனது சிறந்த நண்பா் என்றும் அவா் கூறினாா்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா மற்றும் பிற நாடுகள் விதிக்கும் அதிக வரியை அதிபா் டிரம்ப் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கும் உத்தரவையும் அவா் பிறப்பித்துள்ளாா். இந்தியாவை கடுமையாகப் பாதிக்கும் என எதிா்பாா்க்கப்படும் இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தச் சூழலில், இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க வெளியுறவு இணையமைச்சா் கிறிஸ்டோபா் லாண்டௌவுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா்.

அப்போது, வளா்ந்து வரும் இருதரப்பு வா்த்தக உறவுகள், பாதுகாப்பு-தொழில்நுட்ப ஒத்துழைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் சமநிலையான வா்த்தக உறவை எட்டுவதில் உள்ள தடைகளுக்குத் தீா்வுகாண மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் தெரிவித்தாா்.

இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அதிபா் டிரம்ப், ‘பிரதமா் மோடி அண்மையில் அமெரிக்கா வந்தாா். நாங்கள் எப்போதுமே சிறந்த நண்பா்கள். அதேநேரம், உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இது கொடூரமானது. இந்தியா்களும் இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் மிகுந்த புத்திசாலிகள்.

இருதரப்பு சந்திப்பில் நாங்கள் மிகவும் சிறப்பான பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டோம். இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தை சிறப்பான பலனளிக்கும் என நான் எண்ணுகிறேன்’ என்றாா்.

பிரதமா் மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, பரஸ்பரம் பலனளிக்கும் பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.