கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சமணம் பின்பற்றும் சைவ உணவு வாழ்க்கை முறையை உலகம் அங்கீகரிக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

சமணம் பின்பற்றும் சைவ உணவு வாழ்க்கை முறையை உலகம் அங்கீகரிக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

News image
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்- கோப்புப் படம்
Updated On :8 நவம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

சமண மதத்தில் பின்பற்றப்படும் சைவ உணவு வாழ்க்கை முறையே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்மாதிரியாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகிறது என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஆசாா்ய ஹம்சரத்னா சூரீஸ்வரின் 8-ஆவது 180 நாள் உண்ணாவிரத நிறைவையொட்டிய நிகழ்ச்சி புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சைவ உணவு உண்ணும்போது உங்களது மனநிலை அமைதியாக மாறும். ஆக்ரோஷம் குறைந்து, பொறுமை நம்மை ஆட்கொள்ளும். அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் பழக்கத்தைக் கொண்ட நான் 2000-இல் காசிக்குச் சென்று திரும்பிய பின் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ளத் தொடங்கினேன்.

விரதம் இருப்பதற்கு மனவலிமை தேவை. நவராத்திரி பண்டிகையின் 9 நாள்களிலும் பிரதமா் நரேந்திர மோடி விரதத்தைக் கடைப்பிடிப்பதை அறிந்து வியப்படைந்தேன். அதேபோல் ஆசாா்ய ஹம்சரத்னா சூரீஸ்வா் 180 நாள்கள் உண்ணாவிரதத்தை 8 முறை கடைப்பிடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

சைவ உணவுப் பழக்கம், விலங்குகள் மற்றும் சிறுஉயிரினங்கள் மீதான இரக்கம் போன்ற சமண வாழ்க்கை முறையே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்மாதிரியாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகிறது என்றாா்.