சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பெங்களூர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை! செய்யறிவு காரணமா?

பெங்களூர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வில் செய்யறிவு காரணமாக இருந்துள்ளது.

News image

தற்கொலை - file photo

Updated On :1 ஏப்ரல் 2026, 11:45 am IST

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவந்த காதல் தம்பதி, அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களது தற்கொலையின் பின்னணியில் செய்யறிவு காரணமாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

அண்மையில், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்த இந்த, பானு சந்தர் ரெட்டி (32) - பீபி ஷாஸியா சிரஜ் (31) இருவரும்தான் தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோத்தனூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். பானு சந்தர், செவ்வாய்க்கிழமை காலை தன்னுடைய படுக்கை அறையில் தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த மனைவி பீபி, 18வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை தெரிவித்திருப்பதாவது, இரபுப் பணி முடிந்து பீபி காலை 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு திறக்கப்படவில்லை. காவலாளியைக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பானு சந்தர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. அவரது தற்கொலைக் கடிதமும் கிடைத்துள்ளது.

திடீரென அங்கிருந்து வெளியேறிய பீபி, 18வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பானு சந்தர் எழுதியிருக்கும் தற்கொலைக் கடிதத்தில், ஆண்டுக்கு ரூ.80 லட்சம் சம்பளத்தில் பானு சந்தர் அமெரிக்காவில் பணியாற்றியிருக்கிறார். அங்கு அவர் ஒரு வீடும் கட்டியிருக்கிறார். தெலங்கானாவிலும் அவரது குடும்பம் வாழ வீடு கட்டியிருக்கிறார்.

திடீரென செய்யறிவு காரணமாக, அவர் வேலையை இழந்துள்ளார். வேறு வேலை கிடைக்காததால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரது குடும்பத்தினரும் மனைவியும் ஆறுதலாக இருந்தாலும் அவரால் வேலை இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பீபிக்கு பெங்களூரில் வேலை கிடைத்து அவர்கள் இங்கே வந்துள்ளனர். ஆனால், பீபி, தன்னுடைய திருமணம் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், மன உளைச்சலில் இருந்தவந்த பானு சந்தர் தற்கொலை செய்து கொண்டதும், அதனால் அதிர்ச்சியடைந்த பீபியும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.