மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

டிராக்டரை விடுவிக்க லஞ்சம் கேட்ட தாசில்தார் கையும் களவுமாகக் கைது

திண்டுக்கல் மாவட்டம் பல்லப்பட்டியைச் சேர்ந்த இன்னாசிக் கவுண்டர் மகன் மகேஷ்மூர்த்தி (52). இவர் கடந்த 3ம் தேதி கோயில் விழாவுக்காக, சாலையில் மண்ணடிக்க, டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தார்.

News image
Updated On :18 ஜூன் 2015, 7:03 am

திண்டுக்கல் மாவட்டம் பல்லப்பட்டியைச் சேர்ந்த இன்னாசிக் கவுண்டர் மகன் மகேஷ்மூர்த்தி (52). இவர் கடந்த 3ம் தேதி கோயில் விழாவுக்காக, சாலையில் மண்ணடிக்க, டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தார்.

அப்போது விஏஓ பாலமுருகன், அவரை மறித்து, டிராக்டரை பறிமுதல் செய்தார். நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்ணோடு டிராக்டரைக் கொண்டு வந்தார்.

ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனை விசாரித்த ஆர்டிஒ உத்தமன் 15ம் தேதிக்குள் ரூ.26,100 அபராத செலுத்திவிட்டு டிராக்டரை பெற்றுக் கொள்ளுமாறுக் கூறுகிறார்.

இதையடுத்து பணம் செலுத்தி டிராக்டரை விடுவிக்க ரசீது பெற்றுக் கொண்ட மகேஷ்மூர்த்தி, 16ம் தேதி தாசில்தார் என். மோகனிடம் (49) டிராக்டரை விடுவிக்குமாறு கூறுகிறார்.

டிராக்டரை விடுவிக்க மோகன் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கேட்கிறார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் மகேஷ் மூர்த்தி தகவல் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியபடி, வியாழக்கிழமை காலை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை மகேஷ்மூர்த்தி, மோகனிடம் அளித்த போது, அங்கே மறைந்திருந்த அதிகாரிகள் மோகனை கையும் களவுமாக கைது செய்தனர்.

மோகனை கைது செய்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான் கிளெமண்ட் தலைமையிலான காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.