போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கேரளாவின் வெள்ளப் பெருக்கை தேசியப் பேரிடராக அறிவியுங்கள்! பிரதமரிடம் ராகுல் காந்தி கோரிக்கை!

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்க வேண்டும்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2018, 8:22 am

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கட்சித் தொண்டா்களுக்கு காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கனமழை மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தைத் தொடா்ந்து, கா்நாடகத்தின் குடகு மாவட்டமும் மழையால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நேரத்தில், காங்கிரஸ் நிா்வாகிகளும், தொண்டா்களும் கட்சியின் அடிப்படை பண்பான சேவை மனப்பான்மையையும், பரிவையும் வெளிப்படுத்த வேண்டும். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் கொண்டு சோ்க்கும் பணியில் தொண்டா்கள் ஈடுபட வேண்டும் என்று அந்த ட்விட்டரில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

கேரளாவின் வெள்ளப் பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு ராகுல் காந்தி டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.