தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வாயு கசிவினால் 10 மாணவர்கள் மயக்கம்!

ஜெய்ப்பூரில் பயிற்சி மையம் ஒன்றில் எற்பட்ட வாயு கசிவினால் 10 மாணவர்கள் மயக்கமடைந்ததைப் பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2024, 1:21 pm IST

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரின் மஹேஷ் நகரிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் வாயு கசிவினால் மயக்கமடைந்த 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (டிச.15) மாலை அந்தப் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களில் 10 பேருக்கு கடுமையான தலைவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் அனைவரும் மயக்கமடைந்ததினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முதற்கட்டமாக வாயு கசிவுக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் துவங்கினர். முதலில், அந்தப் பயிற்சி மையத்தின் மேல் தளத்திலுள்ள சமையல் கூடத்திலிருந்து வெளியானதா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் இந்தச் சம்பவம் குறித்தச் செய்தி காட்டுத்தீப் போல பரவியதைத் தொடர்ந்து மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகக்கூறி அந்த பயிற்சி மையத்தை அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் முற்றுகையிட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான காரணம் தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் அந்தப் பயிற்சி மையத்திற்கு அருகிலிருக்கும் வடிகாலில் இருந்து வெளியான வாயு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.