எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வாயு கசிவினால் 10 மாணவர்கள் மயக்கம்!

ஜெய்ப்பூரில் பயிற்சி மையம் ஒன்றில் எற்பட்ட வாயு கசிவினால் 10 மாணவர்கள் மயக்கமடைந்ததைப் பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2024, 1:42 pm IST

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரின் மஹேஷ் நகரிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் வாயு கசிவினால் மயக்கமடைந்த 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (டிச.15) மாலை அந்தப் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களில் 10 பேருக்கு கடுமையான தலைவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் அனைவரும் மயக்கமடைந்ததினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முதற்கட்டமாக வாயு கசிவுக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் துவங்கினர். முதலில், அந்தப் பயிற்சி மையத்தின் மேல் தளத்திலுள்ள சமையல் கூடத்திலிருந்து வெளியானதா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக அந்த மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் இந்தச் சம்பவம் குறித்தச் செய்தி காட்டுத்தீப் போல பரவியதைத் தொடர்ந்து மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகக்கூறி அந்த பயிற்சி மையத்தை அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் முற்றுகையிட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான காரணம் தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் அந்தப் பயிற்சி மையத்திற்கு அருகிலிருக்கும் வடிகாலில் இருந்து வெளியான வாயு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.