தென் ஆப்பிரிக்கவில் உலகின் முதல் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட இஸ்லாமிய மதகுருவாக (இமாம்) அறியப்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கிழக்கு கேப் மாகாணத்தில் உலகின் முதல் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட இஸ்லாமிய மதகுருவாக அறியப்பட்ட முஹ்சின் ஹெண்டிரிக்ஸ், நேற்று (பிப்.15) கெபெர்ஹா நகரத்தில் மற்றொரு நபருடன் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவர்களது காரை மற்றொரு வாகனத்தைக் கொண்டு வழிமறித்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அவர்களை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த முஹ்சினின் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அந்த காரின் ஓட்டுநர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது உறுதியான நிலையில் அதற்கான காரணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் ஆதாரங்களைத் திரட்டி விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், முஹ்சினின் கொலைக்கு சர்வதேச தன்பாலின ஈர்ப்பாளர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரது மரணம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த கொலையானது பாலின பாகுபாட்டினால் நிகழ்த்தப்பட்டதா என அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக, கடந்த 1996 ஆம் ஆண்டு தன்னை தன்பாலின ஈர்ப்பாளராக அறிவித்துக்கொண்ட முஹ்சின் ஹெண்டிரிக்ஸ், பிற தன்பாலின ஈர்பாளர்களின் பாதுகாப்பிற்காகவும் விளிம்புநிலை பெண்கள் இஸ்லாம் பயிலவும் அந்நாட்டின் வயின்பெர்க் நகரத்தில் அல்-குர்பா எனும் மசூதியை நிர்வாகித்து வந்துள்ளார்.
மேலும், 2022 ஆம் ஆண்டு வெளியான "தி ரேடிகல்" என்ற ஆவணப்படத்தில் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ், தனக்கு எதிரான அச்சுறுத்தல்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஒருவர் தனது உண்மையான அடையாளத்துடன் இருக்க வேண்டிய அவசியம் மரணத்தின் பயத்தை விட பெரியது என்று அவர் அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி!

ஈரானிய தலைமை மதகுரு கமேனிக்கு ஜூலை 9 இறுதிச் சடங்கு!

வெற்றியுடன் தொடங்கிய மெக்ஸிகோ, தென் கொரியா

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



