மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மனைவியைத் துன்புறுத்தியவர் திட்டமிட்டு கொலை! விசாரணையில் திருப்பம்!

News image

கொலை வழக்கு

Updated On :14 ஜனவரி 2025, 9:54 am IST

மகாராஷ்டிரம், தாணேயில் தன் மனைவியைத் துன்புறுத்தியவரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜன.11 சுகந்த் ஷத்ருகனா பரிதா (29) என்பவர் நரேஷ் ஷம்பு பகத் வீட்டில் உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக உடல் உபாதைகளால் எதிர்பாராமல் அவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது.

பகத் மீது சந்தேகித்த காவல்துறையினர் திடுக்கிடும் தகவல்களைக் கண்டறிந்தனர். கொலை செய்யப்பட்ட சுகந்த அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்து தனது மனைவியைத் துன்புறுத்தியதாக பகத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் சுகந்த் மற்றும் பகத் இடையே மட்டுமல்லாமல் பகத் மற்றும் அவரது மனைவிக்குமிடையேயும் பிரச்னைகள் எழுந்துள்ளன. இதனால் அவரைக் கொலை செய்ய பகத் திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஜன.10 சுகந்த்தை தனது வீட்டிற்கு அழைத்த பகத், அவரை மது அருந்தச் செய்து பின் அவரது தலையில் சுத்தியல் மற்றும் இரும்புக் கம்பியால் அவரைத் தொடர்ந்து தாக்கியதாக கூறியுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தவுடன் அவரே காவல்துறைக்கு தகவலும் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரிவு 103ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.