ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!

தைவான் அரசு பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல திட்டமிட்டுள்ளதைப் பற்றி...

News image

(கோப்புப் படம்)

Updated On :23 ஜனவரி 2025, 12:06 pm

DIN

தைவான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந்தி பல்லிகள், தைவானின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சுமார் 2,00,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தை அதிகமாக சார்ந்துள்ள தீவு நாடான தைவானில், இந்த பச்சைப் பேரோந்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பது அந்நாட்டின் விவசாயம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதற்காக பணியமர்த்தப்பட்ட சிறப்பு வேட்டைக் குழுவினர் சுமார் 70,000 பச்சைப் பேரோந்திகளை கொன்றனர். கொல்லப்படும் ஒவ்வொரு பேரோந்திக்கும் தலா 15 டாலர்கள் சன்மானமாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வருடம் (2025) சுமார் 1,20,000 பேரோந்திகளை கொல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்காக தற்போது அந்நாட்டின் உள்ளூர் அரசு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இயற்கையாகவே தைவான் நாட்டில் இந்த பேரோந்திகளை வேட்டையாட எந்தவொரு வேட்டையாடி விலங்கினமும் இல்லாதது அந்நாட்டில் அதன் எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இருப்பினும், கூர்மையான நகங்களையும் பற்களையும் இந்த பச்சைப் பேரோந்திகள் இயற்கையாகவே பெற்றிருந்தாலும் எந்த உயிரினத்தையும் பெரும்பாலும் அவை தாக்குவது இல்லை.

ஆண் பேரோந்திகள் 2 அடி நீளம் வளர்ந்து 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும் எனக்கூறப்படும் நிலையில் பெண் பேரோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் இடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், செல்லப் பிராணிகளாக இந்த பேரோந்திகள் வீட்டில் வளர்க்கபடும்போது பெரும்பாலும் 1 ஆண்டுக்குள் உயிரிழந்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மீன்பிடிக்க பயன்படுத்தும் ஈட்டிகளைக் கொண்டு மனிதாபிமான முறையில் இந்த பச்சைப் பேரோந்திகளை வேட்டையாட தைவான் மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.