மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட், காஜூ கத்லி வீட்ல செய்யலாம் வாங்க!

காஜூ என்றால் இந்தியில் முந்திரிப்பருப்பு என்று பொருள். வெறும் முந்திரிப் பருப்பு, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பை காஜூ கத்லி என்கிறார்கள்.

News image
Updated On :25 அக்டோபர் 2019, 7:00 am

கஸ்தூரி ராஜேந்திரன்

உங்களுக்கு காஜூ கத்லி பிடிக்குமா?

காஜூ என்றால் இந்தியில் முந்திரிப்பருப்பு என்று பொருள். வெறும் முந்திரிப் பருப்பு, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பை காஜூ கத்லி என்கிறார்கள். இந்த இனிப்பின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்? இது எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது என்பது தான்.

எழுத்தாளர் சுஜாதா தனது 'கற்றதும், பெற்றதும்’ அனுபவப் பகிர்வில் எழுதி இருப்பார் இந்த இனிப்பின் மகிமை குறித்து. நல்ல காஜூ கத்லி வாங்க வேண்டுமென்றால் ‘ஸ்ரீ மிட்டாய்க் கடை’ க்குச் செல்லுங்கள் என்று சுஜாதாவே மெச்சிய ஸ்வீட் இது.

சரி அப்படியாகப்பட்ட காஜூ கத்லியைத்தான் இப்போது நாம் நமது வீட்டில் தயாரிக்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  • முந்திரிப்பருப்பு – 2 கப்
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • சுடு தண்ணீர் – 3/4 கப்
  • சில்வர் பேப்பர் – 6
  • குங்கமப்பூ – ஒரு சிட்டிகை

செய்முறை:

முந்திரிப்பருப்பை நன்கு அரைத்து பெளடர் செய்து கொள்ளவும். அரைக்கும் போது பிசிறு தட்டாமல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அரைத்த முந்திரிப்பருப்புத் தூளை ஒரு சுத்தமான காய்ந்த பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு. அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி 1 1/2 கப் சர்க்கரையை அதில் கொட்டி, சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பாகு நன்கு திக்கானதும். கையால் பதம் பார்த்துக் கொண்டு அதில் அரைத்து வைத்த முந்திரிப்பருப்புத் தூளைக் கொட்டி நன்கு கிளறவும்.  கிளறும் போது முந்திரிப்பருப்புத் தூளின் நிறம் மாறக்கூடாது. முந்திரிப்பருப்புத் தூள் சர்க்கரைப் பாகுடன் நன்கு கலந்து வெதுவெதுப்பான பதத்தில் இருக்கும் போது அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நெய்யைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.  மாவின் பதம் சப்பாத்தி மாவு பதத்தைக் காட்டிலும் சற்று திக்காக இருக்கும் போது பாத்திரத்தைக் கீழே இறக்கி கை பொறுக்கும் சூட்டில் அதன் மீது ஃபாயில் பேப்பரை ஒட்டித் துண்டுகள் போடலாம்.

காஜூ கத்லியை டைமண்ட் வடிவில் துண்டுகளிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். துண்டின் தடிமன் 2 செமீக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முற்றிலும் முந்திரிப்பருப்பும், சர்க்கரையுஜ்ம் , நெய்யும் மட்டுமே கலந்து செய்வதால் இது மிகவும் சத்தானது மட்டுமல்ல சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஆபத்தானதும் கூட. எனவே நீரழிவு நோயால் அவதிப்படுபவர்கள் இந்தப் பக்கம் எட்டியும் பார்த்து விட வேண்டாம். ஆசைக்கு வேண்டுமானால் சும்மா ஒரு துளி பிட்டுப் போட்டுக்கொள்ளலாம். அவ்வளவு தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.