ஆஸ்கர் விருது பெற்ற இந்திய ஆவணப்படம் ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் ’

கிராமப்புற பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து காலம் காலமாக சமூகத்தில் உலவி வரும் மூடநம்பிக்கைக் கதைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி தாங்களது ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி தங்களுக்குத்
ஆஸ்கர் விருது பெற்ற இந்திய ஆவணப்படம் ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் ’
Published on
Updated on
1 min read

‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ எனும் குறும்படத்திற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலத்திய இன்னல்களைப் பற்றிப் பேசும் இந்த ஆவணப் படத்தின் உருவாக்கத்தில் தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் பங்கு அனேகம். கடந்தாண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘பேட்மேன்’ இந்தித் திரைப்படம் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கைக் கதையே. இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் மாத விடாய் காலங்களில் இப்போதும் கூட சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்த வகையற்று சுத்தமற்ற பழைய கிழிசல் துணிகளையே பயன்படுத்தி வரும் போக்கி இன்றும் கூட கிராமப்புறங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அருணாச்சலம் முருகானந்தத்தின் குழுவினர் எடுத்த ஒரு சர்வேயில் வெறும் 2% பெண்கள் மட்டுமே மாதவிடாய் காலங்களில் நாப்கின்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மிச்ச அனைவரும் துணிகளையே மீண்டும் மீண்டும் துவைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்து மத்திய மாநில அரசுகள் திடுக்கிட்டன. கிராமப்புற பெண்கள் இன்னும் எத்தனை தூரம் விழிப்புணர்வற்று இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சர்வே ஒரு உதாரணம்.

அந்த அறியாமையைக் களைவதற்காக உருவானது தான் பேட்மேன் திரைப்படம். கிராமப்புறப் பெண்கள் நாப்கின் பயன்படுத்துவதன் அவசியத்தை உணர வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ் ஆவணப்படம். கிராமப்புற பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து காலம் காலமாக சமூகத்தில் உலவி வரும் மூடநம்பிக்கைக் கதைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி தாங்களது ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி தங்களுக்குத் தேவையான மாதாந்திர நாப்கின்களை தாங்களே தயாரித்துக் கொள்ளப் போராடி வெற்றி அடைவது தான் இந்தக் குறும்படத்தின் அடிநாதம். இதில் ரியல் பேட்மேன் ஆன அருணாச்சலம் முருகானந்தனும் இடம்பெற்றுள்ளார் என்பது சிறப்பு.

இந்த ஆவணப் படத்தின் இயக்குனர் இரானியப் பெண் ராய்கா செடாப்சி, தயாரித்தவர் மெலிஸா பெர்டன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com