
1983 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி கபில் தேவ் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2007, 2011இல் எம்.எஸ். தோனி தலைமையில் வென்றது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
இந்த வெற்றிக்குப் பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோஹித், கோலிக்கு மாற்றாக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை ஷுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐஏஎன்ஸுக்கு அளித்த பேட்டியில் கபில் தேவ் கூறியதாவது:
சர்வதேச டி20 போட்டிகளில் யாரும் ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை பிடிக்க முடியாது. யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்கமுடியாது. அனைவரும் அவர்களது சொந்த இடத்தை பிடிக்கவே கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சச்சின், தோனி மாதிரிதான் கோலி, ரோஹித் இடத்தையும் யாரும் பிடிக்கமுடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.