தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோலி, ரோஹித் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது: கபில் தேவ்!

உலகக் கோப்பை வெற்றி கேப்டன் கபில் தேவ் யாரும் விராட் கோலி, ரோஹித் இடத்தை பிடிக்க முடியாதெனக் கூறியுள்ளார்.

News image

கபில் தேவ் (கோப்புப் படம்)

Updated On :17 ஜூலை 2024, 4:02 pm

DIN

1983 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி கபில் தேவ் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2007, 2011இல் எம்.எஸ். தோனி தலைமையில் வென்றது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

இந்த வெற்றிக்குப் பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரோஹித், கோலிக்கு மாற்றாக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை ஷுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐஏஎன்ஸுக்கு அளித்த பேட்டியில் கபில் தேவ் கூறியதாவது:

சர்வதேச டி20 போட்டிகளில் யாரும் ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை பிடிக்க முடியாது. யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்கமுடியாது. அனைவரும் அவர்களது சொந்த இடத்தை பிடிக்கவே கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சச்சின், தோனி மாதிரிதான் கோலி, ரோஹித் இடத்தையும் யாரும் பிடிக்கமுடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.