நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 5 வீரர்கள்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் குறித்து...

News image

படம் | ஐபிஎல்

Updated On :25 நவம்பர் 2024, 3:49 pm

DIN

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. இரண்டு நாள்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். அவர் லக்னௌ அணியால் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

அதிக விலைக்கு ஏலம்போன டாப் 5 வீரர்கள்

1.ரிஷப் பந்த் (ரூ.27 கோடி) - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்

2.ஸ்ரேயாஸ் ஐயர் (ரூ.26.75 கோடி) - பஞ்சாப் கிங்ஸ்

3.வெங்கடேஷ் ஐயர் (ரூ.23.75 கோடி) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

4.அர்ஷ்தீப் சிங் (ரூ.18 கோடி) - பஞ்சாப் கிங்ஸ்

5.யுஸ்வேந்திர சஹால் (ரூ.18 கோடி) - பஞ்சாப் கிங்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.