FOLLOW US

ON GOOGLE DISCOVER

தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

துலீப் டிராபி: 2-வது இன்னிங்ஸிலும் திலக் வர்மா அசத்தல்; இறுதிப்போட்டியில் சௌத் ஸோன் அணி!

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி சௌத் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Tilak Varma

திலக் வர்மா - படம் | திலக் வர்மா (எக்ஸ்)

Published On :2 செப்டம்பர் 2026, 4:42 pm IST

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி சௌத் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நார்த் ஸோன் மற்றும் சௌத் ஸோன் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் திலக் வர்மா தலைமையிலான சௌத் ஸோன் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நார்த் ஸோன் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய சௌத் ஸோன் அணி, 43.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்திய சௌத் ஸோன் அணியின் கேப்டன் திலக் வர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 79 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, நாராயண் ஜெகதீசன் 43 ரன்கள், ரிக்கி 42 ரன்கள் மற்றும் சமரன் ரவிச்சந்திரன் 32* ரன்கள் எடுத்தனர்.

நார்த் ஸோன் தரப்பில் அபித் முஸ்டக் இரண்டு விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சௌத் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் இடையேயான இறுதிப்போட்டி வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் திடலில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

South Zone advanced to the final of the Duleep Trophy cricket tournament by defeating North Zone in the second semi-final match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.