முதல் முறையாக பேட்டிங் செய்த அனுபவத்தைப் பகிர்ந்த ரிஷப் பந்த்!

கார் விபத்துக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து ரிஷப் பந்த் மனம் திறந்துள்ளார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | AP

பேட்டிங் செய்யும்போது பதற்றமாக உணர்ந்ததாகவும், முதல் போட்டியில் விளையாடிய விதம் திருப்தியளிப்பதாகவும் தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

கார் விபத்திலிருந்து குணமடைந்துள்ள ரிஷப் பந்த் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அவர் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரிஷப் பந்த்
இவர்கள் இருவரின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனை: ருதுராஜ் கெய்க்வாட்

இந்தப் போட்டிக்குப் பிறகு ரிஷப் பந்த் பேசியதாவது: மைதானத்தில் பேட்டிங் செய்ய நுழைந்தபோது நான் சிறிது பதற்றமாக உணர்ந்தேன். நான் பதற்றமாக உணர்வது இது முதல்முறையல்ல. இந்தப் போட்டியில் நான் செயல்பட்ட விதம் எனக்கு திருப்தியளித்தது என்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com