கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் செளபே தேர்வு

அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் செளபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

News image

கல்யாண் செளபே

Updated On :2 செப்டம்பர் 2022, 10:03 am

DIN

அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் செளபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. மொத்தம் 34 வாக்குகள் கொண்ட இந்த தேர்தலில் 33-1 என்ற வாக்குகளின் முடிவில் முன்னாள் கோல் கீப்பரான கல்யாண் செளபே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாய்சிங் பூட்டியா தோல்வியடைந்தார். 

கல்யாண் செளபே கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவராவார். கிழக்கு வங்கம் மற்றும் மெளன் பாகன் அணியின் கோல்கீப்பராக கல்யாண் செளபே விளையாடியுள்ளார். 

கல்யாண் செளபேவும், பாய்சிங் பூட்டியாவும் கிழக்கு வங்கம் அணிக்காக இணைந்து விளையாடியுள்ளனர். 

அதேபோல் கர்நாடக கால்பந்து கழகத்தின் தலைவரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஏ.ஹரிஸ் அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் பொறுப்புக்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் கிபா அஜய் பொருளாளர் பொறுப்பிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செயற்குழுவிற்கு முன்மொழியப்பட்ட 14 உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட புதிய குழுவைத் தொடர்ந்து இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடையை பிஃபா நீக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.