காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டைப் பிரிவில் அமித் பங்காலும் மகளிர் பிரிவில் நிது கங்காஸூம் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.
பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் ஸாம்பியாவின் பேட்ரிக் சின்யெம்பாவை எதிர்கொண்டார் இந்தியாவின் அமித் பங்கால். தொடக்கத்தில் கடுமையான சவாலாக அமைந்த இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அமித் பங்கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 2018 காமன்வெல்த் போட்டிகளில் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதேபோல மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்றைய போட்டியில் கனடாவின் பிரியங்கா தில்லானைத் தோற்கடித்தார். இறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் டெமி ஜேட் ரெஸ்தானை நிது கங்காஸ் எதிர்கொள்கிறார்.
காமன்வெல்த் நடைப் பந்தயம்: வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை
செஸ் ஒலிம்பியாட் அரங்கை மீண்டும் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
கிரிக்கெட்டிலும் பாரபட்சம் இருந்தது: ஹாக்கி வீராங்கனைகளுக்கு சேவாக் ஆறுதல்
தவறு செய்த நடுவர்: இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளர் அதிருப்தி
காமன்வெல்த் மல்யுத்தம்: ஒரே நாளில் மூன்று தங்கங்களைக் குவித்த இந்தியா
17 வயது மகளிர் உலக கோப்பை கால்பந்து: டிக்கெட் விற்பனை தொடங்கியது
காமன்வெல்த் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் சர்ச்சை: இந்திய அணி ஏமாற்றம்