இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வேதனையுடன் மும்பை அணியை விட்டு விலகும் மூத்த வீரர்!

மும்பை அணியை விட்டு விலகுவதாகப் பிரபல வீரர் ஆதித்யா தரே கூறியுள்ளார். 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 12:33 pm IST

மும்பை அணியை விட்டு விலகுவதாகப் பிரபல வீரர் ஆதித்யா தரே கூறியுள்ளார். 

மும்பையைச் சேர்ந்த 34 வயது ஆதித்ய தரே, 2009 முதல் 80 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான ஆதித்ய தரே, முதல்தர கிரிக்கெட்டில் 9 சதங்கள் எடுத்துள்ளார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை அணிக்காக 4 ஆட்டங்களில் விளையாடி 2 அரை சதங்கள் எடுத்துள்ளார். காயம் காரணமாக காலிறுதி வரைக்கும் மட்டுமே விளையாடினார். 

மும்பை அணி கடைசியாக ரஞ்சி கோப்பையை வென்றபோது ஆதித்ய தரே கேப்டனாக இருந்தார். எனினும் அடுத்தப் பருவத்துக்கான மும்பை அணியின் வீரர்கள் பட்டியலில் ஆதித்ய தரே இடம்பெறவில்லை. 

இந்நிலையில் மும்பை அணியின் திட்டங்களில் தன்னுடைய பெயர் இல்லாததால் உத்தரகண்ட் அணிக்குத் தற்போது மாறியுள்ளார் ஆதித்யா தரே. இதுபற்றி அவர் கூறியதாவது:

மும்பையிலிருந்து விலகுவதை என்னால் வார்த்தைகள் சொல்ல முடியவில்லை. மும்பை வீரராக மிகவும் பெருமிதத்துடன் விளையாடினேன். நான் பொய் சொல்ல மாட்டேன். இந்த விவகாரம் முடிந்த விதம் வேதனையை அளித்தது. எனினும் புதிய சவாலுக்குத் தயாராக உள்ளேன் என்றார்.

அர்ஜுன் டெண்டுல்கர், சித்தேஷ் லேட், ஆதித்யா தரே எனத் தற்போது மூன்று வீரர்கள் மும்பை அணியை விட்டு மற்ற அணிகளுக்குச் சென்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.