தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

பட்ஜெட் 2026! சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு!

சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

நிதியமைச்சர் மரிய வில்சன் - படம்: விடியோ கிளிப்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 2:10 pm IST

சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றினார்.

அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில்,

பேரிடர் காலத்தில் கள அலுவலர்களுக்கு மீட்பு, நிவாரணம் மற்றும் துரித நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை உடனுக்குடன் வழங்கும் வகையில், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலமாக திரட்டப்பட்ட ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீட்டில், ஒருங்கிணைந்த இணைய முகப்பு வாயிலாக, பேரிடர் மீட்புக்கான சுழல் நிதி உருவாக்கப்படும். இதனால் பேரிடர்கள் திறம்பட கையாளப்படுவதுடன், விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாகவே பெய்துள்ளது. சூப்பர் எல்-நினோ (El Nino) வானிலை இத்தகைய வறட்சியான சூழல் நிகழ்வின் காரணமாக தமிழ்நாட்டில் நிலவி வருவதால், குடிநீர் ஆதாரங்களை பலப்படுத்துவதும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை வட்டார அளவில் சேமித்து வைப்பதும், இன்றியமையாத ஒன்றாகும். இதனை கருத்தில் கொண்டு, சூப்பர் எல்-நினோவின் (El-Nino) காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வித தடங்கலும் வந்து விடக் கூடாது என்பதற்காக, மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்காக ரூ. 5,462 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ. 11,532 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Summary

Finance Minister Maria Wilson announced in the Tamil Nadu budget that Rs. 340 crore has been allocated to tackle the impact of the 'Super El Nino'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.