ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தீபிகா - ஹரிந்தர்பால்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வென்றது. 
தீபிகா பல்லிகல் / ஹரிந்தர்பால்
தீபிகா பல்லிகல் / ஹரிந்தர்பால்
Published on
Updated on
1 min read

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வென்றது. 

இந்த ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

12 ஆவது நாளான இன்று,  ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங்கலந்துகொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-10, 11-10 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தனர். இதன்மூலம் இந்தியாவுக்கு ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com