உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி. 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி. இந்நிலையில் உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது.
வங்கதேச அணியின் சுழலில் ஆப்கானிஸ்தான் 37.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு சுருண்டது. ஷகிப், மெஹதி ஹாசன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
இதையும் படிக்க: ஆசியப் போட்டி: பந்து வீச்சில் அசத்தும் இந்தியா தங்கம் வெல்லுமா?
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஜ்-48, இப்ரஹிம் ஜார்டன் - 22,அஜமதுல்லா- 22 ,ஷாகித் -18 ரன்கள் எடுத்தார்கள். ரஷித் கான் 8 ரன்களும் நபி 6 ரன்களும் நஜிபுல்லா 5 ரன்களும் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்கள்.
157 ரன்கள் இலக்காக கொண்டு வங்கதேச அணி விளையாடி வருகிறது. 9 ஓவர் முடிவில் 39/2 ரன்கள் எடுத்துள்ளது.