தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியை பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது. மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது. சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தில்லி அணியின் கேப்டனாக ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார். இதனால் புதிய கேப்டனைத் தேர்வு செய்யும் நிலையில் உள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி. கேப்டனாக வார்னரும் துணை கேப்டனாக அக்ஷர் படேலும் தேர்வாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2016-ல் ஐபிஎல் போட்டியை சன்ரைசர்ஸ் வென்றபோது அந்த அணியின் கேப்டனாக இருந்தார் வார்னர்.
டி20 உலகக் கோப்பை: பிரபல இந்திய வீராங்கனை விலகல்!
டிஎன்பிஎல் ஏலத்தில் பங்கேற்ற அஸ்வின்!
டபிள்யூபிஎல்: லக்னெள அணியின் கேப்டன் அறிவிப்பு
சிஎஸ்கேவுக்குப் பாதிப்பு?: அயர்லாந்து டெஸ்டில் பங்கேற்க ஸ்டோக்ஸ் முடிவு!
இந்திய ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் அறிவிப்பு