பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெறுபவர்களை நானும், ரோஹித் சர்மாவும் முடிவு செய்வதில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: இந்திய அணியில் இடம்பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் (இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்) எப்போதும் இருக்கிறார்கள். யாரும் அணியில் இடம்பெற முடியாது என்பது கிடையாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைவருமே இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வுக் குழுத் தலைவர்களின் கவனத்தைப் பெற வேண்டும்.
பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்தில் யார் இடம்பெற வேண்டும் என்பதை நான் முடிவு செய்வதில்லை. ஒப்பந்தம் தொடர்பான முடிவுகளை தேர்வுக்குழுத் தலைவர்களும், இந்திய கிரிக்கெட் வாரியமுமே எடுக்கும். எதன் அடிப்படையில் வீரர்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. நானும், ரோஹித் சர்மாவும் பிளேயிங் லெவனை மட்டுமே தேர்வு செய்வோம். நாங்கள் பிசிசிஐ ஒப்பந்தம் குறித்து ஒருபோதும் ஆலோசித்தது கிடையாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியில் இரு தமிழா்கள்

இந்தியாவின் ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா: ராகுல்!

ராகுல் டிராவிட், மிதாலி ராஜ், ரோஜர் பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு




