வரலாறு படைத்த ஜானிக் சின்னர்..! இத்தாலியின் முதல் வீரர்!

இத்தாலியின் பிரபல டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஜானிக் சின்னர்
ஜானிக் சின்னர்படம்: எக்ஸ்/ ஏடிபி டூர்
Published on
Updated on
1 min read

ஷாங்காய் மாஸ்டர்ஸின் அரையிறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் வென்றதன்மூலம் ஏடிபி வருடாந்திர முடிவில் நம்.1 என்ற இடத்தை தக்கவைத்த முதல் இத்தாலியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இத்தாலியின் ஆண்கள் பெண்கள் பிரிவுகளிலும் சேர்த்தும் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1973இல் கணினி முறையில் இந்த ஏடிபி தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இத்தாலியில் யாரும் ஏடிபி வருடாந்திர முடிவில் முதலிடத்தை தக்கவைத்ததில்லை. இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் சின்னர்.

உலக அளவில் சின்னர் ஏடிபி வருடாந்திர முடிவில் முதலிடத்தை தக்கவைத்த 19ஆவது வீரராக இருக்கிறார். ஆக்டிவ் வீரர்களில் ஜோகோவிச், ரஃபேல் நடால், அல்கராஸ் வரிசையில் 4ஆவது வீரராக இருக்கிறார்.

23 வயதாகும் சின்னர் இந்தாண்டு ஆஸி. ஓபன், அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் பெற்றார். ஏடிபி டூரில் 6 டைட்டில்களை வென்று அசத்தினார்.

ஞாயிறுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸிலும் வென்று தனது 7ஆவது கோப்பையை வெல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னர் 11,010 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். கார்லோஸ் அல்கராஸ் 7,010 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார்.

ஏடிபி தரவரிசைப் பட்டியல்.
ஏடிபி தரவரிசைப் பட்டியல்.

சின்னர், 17 வாரங்களாக முதலிடத்தை தக்கவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சின்னர் கூறியதாவது:

இது அற்புதமானது. இது சிறுவனாக இருக்கும்போதும் இளைஞராக இருக்கும்போதும் நம்.1 ஆகுவது என்பது நான் கண்ட கனவு. இது ஒரு சிறப்பான உணர்வு. இது எனக்கு மிகவும் முக்கியமானது. எனது குடும்பம், நண்பர்கள், எனது அணி என இவர்கள் இல்லாமல் என்னால் இதைச் சாதித்து இருக்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com