
5 முறை உலக சாம்பியன் பிரேசிலுடன் முதல்முறையாக மோதும் இந்தியா..! டிக்கெட் விற்பனை தொடக்கம்!
இந்தியா - பிரேசில் கால்பந்துப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து...

இந்தியா - பிரேசில் போட்டிக்கான டிக்கெட் விற்பனை - படம்: எக்ஸ் / இந்தியன் ஃபுட்பால்.
இந்தியா - பிரேசில் கால்பந்துப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
கால்பந்து உலகக் கோப்பையை அதிகமுறை (5) வென்ற பிரேசில் அணியுடன் முதல்முறையாக இந்தியா மோதுகிறது. இதுவரை இந்திய கால்பந்து அணி ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பிரேசில் கால்பந்துப் போட்டி வரும் அக்டோபர் 3ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை டிஸ்டிக் பக்கத்தில் தொடங்கியுள்ளது.
இந்திய அணி செப்.26ல் பனாமா உடனும் அக்.3ல் பிரேசில் அனியுடனும் மோதுகின்றன. அதனுடன் மூன்றாவது மிகப்பெரிய போட்டியும் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளன.
ஃபிஃபா தரவரிசையில் உருகுவே அணி 20ஆவது இடத்தில் இருக்கிறது. அதனுடம் மோதவிருக்கிறது. பனாமா போட்டி பெங்களூரிலும் பிரேசில், உருகுவே ஆகிய போட்டிகள் கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கின்றன.
The wait is over. See you at India vs Brazil. ð®ð³ð§ð·
— Indian Football (@IndianFootball) September 2, 2026
Get tickets on https://t.co/EWNP1YVRPc ðï¸
ðï¸ October 3
ðï¸ VYBK, Kolkata#INDBRA #BlueTigers #IndianFootball pic.twitter.com/C5Qwsv134o
Summary
India to face five-time world champions Brazil for the first time! Ticket sales begin!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





