டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 373.93 புள்ளிகள் சரிந்து 76,570.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 141.35 புள்ளிகள் சரிந்து 23,914.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 5:17 pm IST

மும்பை: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல்களால் உலகளாவிய பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, பங்குச் சந்தை 3வது நாளாக 374 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 808.56 புள்ளிகள் சரிந்து 76,135.72 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 373.93 புள்ளிகள் சரிந்து 76,570.35 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 141.35 புள்ளிகள் சரிந்து, 23,914.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, எச்.சி.எல் டெக், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், என்.டி.பி.சி மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்து, எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் மீண்டும் எழுந்ததால், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை தகர்ந்ததாலும், உலகளாவிய விற்பனை தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தைகள் 3வது நாளாக இன்றும் சரிந்தன.

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய பத்திர வருவாயை உள்ளிட்டவையைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை விட்டு சற்று விலகி இருப்பதாக வர்த்தர்கள் தெரிவித்தனர்.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 1,143.38 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 3.99 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 2.85 சதவீதமும், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் சரிவுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பிய சந்தை சரிவுடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.40 சதவீதம் உயர்ந்து 95.13 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Stock markets declined for the third consecutive day on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.