திருப்பூரை அடுத்த கோயில்வழி அருகே இரும்புக்கூண்டில் மர நாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கியது.
திருப்பூர் மாவட்டம், கோயில்வழி அருகிலுள்ள இந்திரா காலனியில் வசிப்பவர் அர்ஜுன்(32). இவரது வீட்டருகில் அதிக அளவில் புதர் மண்டிக் கிடப்பதால் பெருச்சாளிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு வரும் பெருச்சாளிகளைப் பிடிக்க சிறிய அளவிலான இரும்புக் கூண்டை வைத்திருந்தார்.
இதனிடையே உணவு தேடி வந்த மர நாய் ஒன்று அந்தக் கூண்டில் மாட்டியது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. அரிய வகை விலங்கான மர நாயைக் காண அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். இதுகுறித்து அர்ஜுன் தெரிவித்த தகவலின்படி, வனத் துறையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து கூண்டில் சிக்கிய மர நாயைப் பார்வையிட்டனர். பின்னர் வனத் துறையினர் அதை பத்திரமாக மீட்டுச் சென்று ஊதியூர் அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் சுயேச்சைகள் முன்னிலை வகிப்பது ஏன்?

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக - நேரலை

கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!

அஸ்ஸாம்: என்டிஏ 88 தொகுதிகளில் முன்னிலை!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


