தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கூண்டில் சிக்கிய அரிய வகை மர நாய்

திருப்பூரை அடுத்த கோயில்வழி அருகே இரும்புக்கூண்டில் மர நாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கியது.

News image
Updated On :7 ஜனவரி 2019, 12:25 am IST

திருப்பூரை அடுத்த கோயில்வழி அருகே இரும்புக்கூண்டில் மர நாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கியது.
 திருப்பூர் மாவட்டம், கோயில்வழி அருகிலுள்ள இந்திரா காலனியில் வசிப்பவர் அர்ஜுன்(32). இவரது வீட்டருகில் அதிக அளவில் புதர் மண்டிக் கிடப்பதால் பெருச்சாளிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு வரும் பெருச்சாளிகளைப் பிடிக்க சிறிய அளவிலான இரும்புக் கூண்டை வைத்திருந்தார்.
 இதனிடையே உணவு தேடி வந்த மர நாய் ஒன்று அந்தக் கூண்டில் மாட்டியது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. அரிய வகை விலங்கான மர நாயைக் காண அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். இதுகுறித்து அர்ஜுன் தெரிவித்த தகவலின்படி, வனத் துறையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து கூண்டில் சிக்கிய மர நாயைப் பார்வையிட்டனர். பின்னர் வனத் துறையினர் அதை பத்திரமாக மீட்டுச் சென்று ஊதியூர் அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவித்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.