திருப்பூரை அடுத்த கோயில்வழி அருகே இரும்புக்கூண்டில் மர நாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கியது.
திருப்பூர் மாவட்டம், கோயில்வழி அருகிலுள்ள இந்திரா காலனியில் வசிப்பவர் அர்ஜுன்(32). இவரது வீட்டருகில் அதிக அளவில் புதர் மண்டிக் கிடப்பதால் பெருச்சாளிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு வரும் பெருச்சாளிகளைப் பிடிக்க சிறிய அளவிலான இரும்புக் கூண்டை வைத்திருந்தார்.
இதனிடையே உணவு தேடி வந்த மர நாய் ஒன்று அந்தக் கூண்டில் மாட்டியது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. அரிய வகை விலங்கான மர நாயைக் காண அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். இதுகுறித்து அர்ஜுன் தெரிவித்த தகவலின்படி, வனத் துறையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து கூண்டில் சிக்கிய மர நாயைப் பார்வையிட்டனர். பின்னர் வனத் துறையினர் அதை பத்திரமாக மீட்டுச் சென்று ஊதியூர் அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன் திரைப்படம்!

கேட்கவே கூசும் கொச்சையான வார்த்தைகளை உதயநிதி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது: தமிழிசை

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



